சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடிய தூத்துக்குடி ஆட்சியர்.!


 சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடிய தூத்துக்குடி ஆட்சியர்.!


தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, இனிப்புகள் வழங்கி இன்று (09.11.2023)

தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.


தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரத்தில் அமைந்துள்ள வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, இன்று நேரில் சென்று அங்குள்ள மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது, மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். மாணவ, மாணவியர்களும் மாவட்ட ஆட்சித்தலைவருடன் உற்சாகமாக உரையாடி மகிழ்ச்சி அடைந்தனர்.


அதனைத்தொடர்ந்து வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு கட்டிடங்களின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Previous Post Next Post