மொடச்சூரில் பைக் விபத்து... இரண்டு இளைஞர்கள் பரிதாப பலி

கோபி ராம்நகர் சேர்ந்த வர் முருகேசன் மகன் ராஜ் குமார் (25). பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ராஜ்குமாரின் மனைவி சம்யுக்தா. இவர்களுக்கு 3 வயதில் இனியன் என்ற மகனும் , ஒரு வயதில் மகிழன் என்ற மகனும் உள்ளனர்.

கோபி வண்டி பேட்டையை சேர்ந்தமூர்த்தி மகன் நவீன்குமார் (23) எலெக்ட்ரிசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை, இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். நவீன் குமார் பைக்கை  ஓட்டி சென்றார். பின்னால் ராஜ்குமார் உட்கார்ந்திருந்தார். அவர்கள் குன்னத்தூர் சாலை  மொடச்சூர் கோவில் வந்த போது, நிலை தடுமாறி கோவில் சுவற்றில் மோதினர்.

 பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பைக்கை ஓட்டி வந்த நவீன்குமார் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மேல்சிகிச்சைக்காக கோவை எடுத்துச் செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

இருவரது பிரேதமும் கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வரு கின்றனர்.

Previous Post Next Post