இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பாதிக்கு மேல் குழந்தைகள் - யுனிசெஃப் அதிர்ச்சி தகவல்.!
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பாதிக்குப் பாதி குழந்தைகள் என யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் தகவல்; தப்பிப் பிழைத்த குழந்தைகளும் உடல் மற்றும் மனநல பாதிப்பால் அவதியுறுவதாக வேதனை
3,450க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், திகைப்பூட்டும் வகையில் இது ஒவ்வொரு நாளும் கணிசமாக உயர்கிறது, மொத்தத்தில் காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது" என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் அதிர்ச்சி தகவல்.