புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலாசனை கூட்டம். மாநில தலைவர் காடேஸ்வராசும்பிரமணியம் பங்கேற்பு.


 உதயநிதி ஸ்டாலின் சனதானம் குறித்து பேசியது கருத்து சுதந்திரம் என்றால்புஞ்சைபுளியம்பட்டியில், விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி நிர்வாகிகள் பேசிய கருத்துக்கு மட்டும் காவல் துறை கைது செய்தது ஏன்?இதை கண்டி. த்து வரும் ஜனவரி 26 ம் தேதி புஞ் சை புளியம்பட்டியில் இந்து முன் னணி மாநாடு நடைபெறும் இந்து முன்னணி மாநில தலைவர் காடே ஸ்வர சுப்பிரமணியம் பேட்டி.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில்ஈரோடு மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் நடை பெற் றது. 

கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பி  ரமணியம் தலைமையில் மாநில செயலாளர் செந்தில் முன்னிலை யில் நடைபெற்றது இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி பவானிசாகர் கோபி செட்டிபாளையம் நம்பியூர் உட்பட்ட பகுதியை சேர்ந்த இந்து முன்னணி மாவட்டம் நகரம் ஒன்றிய நிர்வாகி கள் கலந்து கொண்டு ஜனவரி 26 ம் தேதி மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இத னை தொடர்ந்து மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தி யாளர் சந்திப்பின்போது, புஞ்சை புளியம்பட்டிகாமாட்சிஅம்மன்கோவி லுக்கு சொந்தமான கடை வாடகை பல ஆண்டுகளாக வசூல் செய்யா மல் வாடகை பணம் நிலுவையில் உள்ளது இதனை இந்து அறநிலை யத் துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு வாடகை பணத்தை வசூலிக்க வேண்டும்.

சென்னிமலை முருகன் கோவிலில் ஜனவரி 1ம் தேதிவேல்வழிபாடுதிரு விழாநடைபெற்று,வேல் பழனி முரு கன் கோவிலுக்கு கொண்டு செல்ல உள்ளது.இதனை இந்து முன்னணி ஆதரவுதரஉள்ளது இந்துமுன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ள னர்.உதயநிதி ஸ்டாலின் சனதானம் குறித்து பேசியது கருத்து சுதந்திரம் என்றால் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி நிர்வாகிகள் பேசிய கருத்துக்கு மட்டும் காவல் துறை கைது செய்து,சிறையில் ஏன் அடை த்தனர்.விடுதலைசிறுத்தைகள் கட்சி திமுக ,திக, இந்திய கம்யூ னிஸ்டு கட்சி போன்ற கட்சியினர் கருத்து சுதந்திரம் குறித்து யாரும் பேசவில்லை.புஞ்சை புளியம்பட்டி யில் லாட்டரி சீட்டு மதுபாட்டில்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது இதனை காவல்துறை அதிகாரி தடுத்து நடவடிக்கைஎடுக்க வேண்டும்இதை கண்டித்து வரும் ஜனவரி 26 ம் தேதி புஞ்சை புளியம் பட்டியில் இந்து முன்னணிசார்பில் மாநாடு நடைபெறும் என தெரிவித் தார். உடன் இந்து முன்னணி நிர் வாகிகள் பாலமுருகன். கார்த்திக், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர் .

Previous Post Next Post