'திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை தொடங்கிவிட்டது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் மொத்தம மருந்து வாங்குவது குறைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் கொள்முதல் மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தகவல் தெரிய வருகிறது. இதனால் ஏழை எளிய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் கடந்த பின்பும் மக்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு கண்டனங்கள்! என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை.