கலைஞரின் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வருகை: தூத்துக்குடியில் அமைச்சர்கள் வரவேற்பு!
தூத்துக்குடியில் கலைஞர் மு.கருணாநிதியின் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பன்முக ஆற்றலையும், தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் அளித்த மக்கள் நலத்திட்டங்களையும் மக்களிடையே கொண்டு செல்லும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த்சேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.