மொடக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் மேதகு சி பி ராதாகிருஷ்ணன்....

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி  கொடுமுடி வட்டம் கொளாநெல்லி ஸ்ரீ பூமி நீளா சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்,




வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சியில் நடைபெற்ற கோமாதா பூஜையில், மரம் நடும் விழாவிலும் கலந்து கொண்டார், வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வேலப்பம்பாளையம் அருகில் உள்ள மலையாத்த குட்டையில்  வேத பாடசாலை மற்றும் திருமண மஹால் அடிக்கல் நாட்டு விழா தொடங்கி வைத்தார்,



வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு புதுப்பாளையத்தில்  அரசு நடுநிலைப் பள்ளிக்கு  1954 ம் ஆண்டு இடம் மற்றும் கட்டிடம் கட்டிக் கொடுத்த நன்கொடையாளர்களான ஆர் செங்கோட கவுண்டர் மற்றும் முத்தாயம்மாள் தம்பதியினரின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார்,




 மேலும்பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  ஜார்கண்ட் மாநில ஆளுநர் மேதகு  சி பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி  வரவேற்றார்கள் .




 உடன் பாரதி ஜனதா கட்சியின் வி சி வேதாந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ் டி  செந்தில்குமார்,  பாரதிய ஜனதா நிர்வாகிகளும், கலந்து கொண்டனர்.

Previous Post Next Post