ஈரோடு கொடுமுடி வட்டம் சிவகிரி ஜீவாதெருவில் தட்டையநாட்டு தடிமாறன் வம்சாவழியை சேர்ந்த ராமானந்த சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது.
சித்தர் வழிபாட்டு தலமான இங்கு பெளர்ணமி, அமாவாசை, கிருத்திகை, மற்றும் திங்கள்கிழமை, வெள்ளிக் கிழமை, வியாழக்கிழமை ஆகிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சித்தர் ஜீவ சமாதி என்பதால் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் அதிகமான பக்தர்கள் வருவார்கள்.
ராமானந்த சுவாமிகளின் 98-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று (ஜூன்,23) வெள்ளிக்கிழமை நடைபெற்றது குருபூஜையை முன்னிட்டு ராமானந்தருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிசேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமானந்தசுவாமிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.