மதுரை மாவட்டம் தும்மகுண்டு பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் என்ற ராணுவ வீரர் வீரமரணமடைந்தார்..
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ரஜோரியின் தர்ஹல் பகுதியில் உள்ள ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படை முகாமில் புகுந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
உடனடியாக அங்கிருந்து இந்திய வீரர்களும் அவர்களின் சதியை முறியடித்து இரண்டு பேரையும் சுட்டு கொன்றனர். இந்த மோதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதில், ஒருவர் மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மணன் என தெரியவந்துள்ளது.
மற்ற இருவரும், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ராணுவம் அறிவித்துள்ளது.