கொடுத்த கடனை திரும்பக் கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த அருர் தொழிலதிபர்!


தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த  தொழிலதிபர் கே.எஸ். ராஜா.அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்,  தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். 

அவரது மகள்கள் பிரியதர்ஷினி அரசு மருத்துவராகவும், தேவதர்ஷினி ஆடிட்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர். 

ராஜா, தன் இரு மகள்களின் படிப்புச் செலவிற்காக சேலம் மாவட்டம்  அயோத்தியாப்பட்டினத்தைச் சேர்ந்த சரஸ்வதியிடமிருந்து  ரூ.6,25,000 கடனாகப் பெற்றார்.  கடன் வாங்கும்போது ராஜா அவரது மனைவி, மகள்கள் சரஸ்வதியின்   வீட்டிற்கு வந்து கடன் கேட்டதை தொடர்ந்து அதற்கு  நீங்கள் பணம் இல்லை என்று சொன்னால் 

நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சொன்னதனால்  சரஸ்வதியும் அவரது கணவர் திருநாவுக்கரசும் இறக்கப்பட்டு அவரது  செயினை அடகு வைத்து பணம் வாங்கிக் கொடுத்துள்ளனர். 

 தற்போது சரஸ்வதி, ராஜாவுக்கு கொடுத்த பணத்தை  திரும்பி கேட்டதற்கு, பணம் தர மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து  அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சரஸ்வதி, புகார்  மனு அளித்துள்ளார்.

Previous Post Next Post