கோவில்பட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடி கைது.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று  ரோந்து பணியில் ஈடுபட்டபோது 

கதிரேசன் கோவில் மலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முத்துகுமார் (28) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே போலீசார்  முத்துகுமாரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட  முத்துகுமார் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு, கோவில்பட்டி கிழக்கு மற்றும் கயத்தாறு ஆகிய காவல் நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post