பழனி லாட்ஜில் சம்பவம்: ஆணுறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!

குடும்ப பிரச்சினை காரணமாக,  பழனி லாட்ஜில்  எலெக்ட்ரிசியன் ஒருவர் ஆணுறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பழனியில் ரயில்வே பீடர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் உள்ளது. இந்தலாட்ஜில் நாமக்கல்லை சேர்ந்த   சீனிவாசன் என்பவர் தங்கியுள்ளார்.  இவர் எலக்ட்ரீசியன் கடையில் பணியாற்றி வருகிறார்.

 குடும்பப் பிரச்சினை காரணமாக சோகத்தில் இருந்த சீனிவாசன் மது அருந்திவிட்டு போதையில்  தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டு கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் .

 அப்போது  ரத்த வெள்ளத்தில் மயங்கிய இவரை பக்கத்து அறையில் தங்கியிருந்த நபர்கள்   சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 மற்றும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சீனிவாசன் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Previous Post Next Post