உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் எங் இந்தியன் அமைப்பும் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்
இரத்த தானம் முகாமில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி ஆணையர், அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் இரத்த தானம் அளித்தனர்.
இந்நிகழ்வில் துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ் சுகாதார இயக்குனர் பொற்செல்வன்,நகர் நல அலுவலர் அருண்குமார், மேயர் உதவியாளர்கள் பிரபாகர், ஜாஸ்பர் உள்பட நிர்வாகிகள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்