நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம்.!


தூத்துக்குடி மாவட்டத்தில்  நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பளார் டாக்டர்  பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு வரும் 25.06.2022 மற்றும் 26.06.2022 ஆகிய 2 நாட்கள் எழுத்து தேர்வு அறிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6965 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

மேற்படி நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காரப்பேட்டை நாடார் மெட்ரிக் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, 


புனித மரியன்னை மகளிர் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 7 தேர்வெழுதும் மையங்களில் நடைபெற உள்ளது.

மேலும் தேர்வுக்கான பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பாலாஜி சரவணன்  தலைமையில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சு பணியார்களுக்கு தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் ஆவுடையப்பன், மணியாச்சி சங்கர், 


மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிவசுப்பு, ஆயுதப்படை கண்ணபிரான் மற்றும் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளாதேவி உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் 

காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி ஆறுமுகம், அலுலக கண்காணிப்பாளர்கள் உட்பட அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post