கோவில்பட்டியில் ரயில்வே சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்  DREU மற்றும் CITU சார்பில் கோவில்பட்டி ரயில் நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில்வே சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரயில்வே சொத்துக்களை தனியாருக்கு வழங்கக் கூடாது, கோவை -  சீரடி தனியார் ரயில் இயங்குவதை உடனே நிறுத்த வேண்டும், 

தனியார் மயம் என்ற பெயரில் மோசடி கம்பெனிகளுக்கு ரயில்களை விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு DREU மதுரை மண்டல துணைத் தலைவர் ராஜு தலைமை வகித்தார். தூத்துக்குடி தலைவர் குரூஸ் அந்தோணி, செயலர் ராதாகிருஷ்ணன், இணைச் செயலர் தளவாய்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிஐடியு தொழிற்சங்க மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட துணைத் தலைவர் தெய்வேந்திரன், நிர்வாகிகள் மோகன்தாஸ், ஆனந்த், பாலகிருஷ்ணன், ராமசுப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post