குட்டி மெரினா போல் ஜொலிஜொலிக்கும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை


இராமேஸ்வரம் ஜூன் 16

இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடற்கரை மெரினா போல் காட்சியளிக்கின்றது  யாத்திரைகளும் உள்ளூர் மக்களும் மனமகிழ்ச்சியுடன் மாலை நேர கடற்கரையை சுற்றி பார்க்கின்றனர்

உள்ளாட்சித் தேர்தலில் 9வது வார்டில் வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினர்களால் நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் இ.கே நாசர் கான் இவர் நகர்மன்றத் தலைவர் ஆனதிலிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள அத்தியாவசிய பொது பிரச்சினைகள் அனைத்தையும் துரித நடவடிக்கைகளால் சரி செய்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை குப்பைகள் நிறைந்தும் மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் மக்கள் அக்னி தீர்த்த கடற்கரை வருவதை தவிர்த்து வந்தனர்.

 இதை சரி செய்யும் விதமாக மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம்  சட்டமன்ற உறுப்பினரின் அறிவுறுத்தலின்படி அக்னி தீர்த்த கடற்கரை முழுவதும் சுத்தம் செய்து மின் விளக்குகள் அனைத்தும் சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றியுள்ளார் அவருடன் சேர்ந்து துணைச் சேர்மன் பிச்சை என்ற தட்சிணாமூர்த்தி மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் தினம் தினம் களப்பணி ஆற்றி வருகின்றனர்

அதேபோல் வரும் யாத்திரிகர்களுக்கு கழிப்பிட வசதி குடிநீர் வசதி எங்கும்  இல்லாததால் அதையும் சரி செய்து தர வேண்டுமென பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்தனர்

Previous Post Next Post