தூத்துக்குடி வணிக வளாகத்தில் 6 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை.!


தூத்துக்குடியில் வணிக வளாகத்தில் 6 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில், முதல் மாடியில் உள்ள ஸ்டுடியோ, இன்சுரன்ஸ் கம்பெனி, 

ஆட்டோ கன்சல்டிங், பைனான்ஸ் அலுவலகம், பெனிபிட் பண்ட், பல் மருத்துவமனை, உட்பட 6 கடைகளில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதில் இதில் கேமரா, ரூ.50ஆயிரம் ரொக்கம் உட்பட ரூ.2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக் கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். எப்பொழுதும் ஆட்கள் நடமாட்டம் காணப்படும் இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post