தூத்துக்குடி : 3 இடங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு.!


பயங்கரவாதிகள் மிரட்டலையடுத்து தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் புராதான சின்னங்கள் உள்ள முக்கியமான 149 இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது 

இதன் எதிரொலியாக முக்கிய வழிபாட்டுத் தலங்கள் புராதான சின்னங்கள் உள்ள இடங்களில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு பணிகளை செய்து பாதுகாப்பை பலப்படுத்திகின்றனர். 

இதற்காக அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு கண்காணிக்கின்றனர் நேற்று தூத்துக்குடி வந்து சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் பனிமய மாதா ஆலயத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஆய்வு மேற்கொண்டனர் 

ஆலயத்தை சுற்றி பார்த்து போலீசார் அங்கு உள்ள அறைகள் வாசல்கள் அவசர வேலைகள் உள்ளிட்ட கட்டணங்கள் வழிபாடு நடக்கும் இடங்கள் போன்றவற்றை கண்டெடுத்தனர்.

மேலும் மின் வசதி ஜெனரேட்டர் வசதி குறித்து விசாரணை நடத்தி அந்த பகுதியில் இருந்து எளிதாக ஆலயத்திற்கு வந்து செல்லலாம் என்பதை கண்டறிந்து ஆலயத்தை குறித்து வரைபடத்தை சேகரித்துக் கொண்டனர்

மேலும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை ஆகிய இடங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த உள்ளனர்.

Previous Post Next Post