அமமுக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் மேயர் அ.விசாலாட்சி நியமனம்.. கட்சி நிர்வாகிகள் வாழ்த்து

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்டம், திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்டம் என செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இது திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்து உள்ளது. 

திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுகவிற்கு முன்னாள் மேயர் அ.விசாலாட்சியை மாவட்ட செயலாளராக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். இதையடுத்து மண்டல பொறுப்பாளர் சி.சண்முகவேலுவுடன், முன்னாள் மேயர் அ.விசாலாட்சி டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

இதுகுறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி கூறுகையில், ‘ திருப்பூர் மாநகர் மாவட்டமானது திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த மாவட்டத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து மாநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ள கழக பொது செயலாளர் அண்ணன் டிடிவி.தினகரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சித்தலைமையின் ஆணையின் கீழ் திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் அமமுகவின் முழுமையான வளர்ச்சிக்காக அயராது உழைப்பேன். என்றார். 

புதிதாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள முன்னாள் மேயர் அ.விசாலாட்சிக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
Previous Post Next Post