விளாத்திகுளத்தில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது


விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் உடனடியாக கைது - ரூபாய் 40,000/- மதிப்பிலான 1¼ சவரன் தங்க நகை மீட்பு.

விளாத்திகுளம் கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி வைய்யம்மாள் (80) என்பவர் இன்று (10.05.2022) அதிகாலை தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வைய்யம்மாள் அணிந்திருந்த தங்க செயினை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து வைய்யம்மாளின் மகன் சுப்புராஜ் (45) என்பவர் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த குமரய்யன் மகன் பார்த்தசாரதி (38) என்பவர் மேற்படி வைய்யம்மாளிடம் தங்க நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு வழக்கு பதிவு செய்து எதிரி பார்த்தசாரதி என்பவரை உடனடியாக கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 40,000/-  மதிப்பிலான 1¼ சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்தார்.

Previous Post Next Post