"சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஒருதலைப்பட்சமாக சித்தரிப்பு" - சிங்கப்பூரில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்க்கு தடை.!

இந்தத் திரைப்படம் பல்வேறு சமூகத்தினரிடையே பகைமையை ஏற்படுத்தும் மற்றும் நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று கூறி , தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்க்கு சிங்கப்பூர் திங்கள்கிழமை தடை விதித்துள்ளது .

"காஷ்மீரில் நடந்து வரும் மோதலில் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை சித்தரிக்கும் வகையில் ஆத்திரமூட்டும் மற்றும் ஒருதலைப்பட்சமாக சித்தரிக்கப்பட்ட படத்திற்கு திரையிடுதல் மறுக்கப்படும்" என்று நாட்டின் இன்ஃபோகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி மற்றும் கலாச்சார அமைச்சகம் மற்றும் இளைஞர் மற்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் "இது போன்ற திரைப்படங்கள் பல்வேறு சமூகங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்துவதற்கும், பல இன மற்றும் பல மத சமூகத்தில் சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சாத்தியம் கொண்டவை" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post