கொடுமுடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ஈரோடு கொடுமுடி வட்டம்  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி   திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கொடுமுடி வட்டார கல்வி அலுவலகம் முன் வட்டாரத் தலைவர் நா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டாரச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் திலகவதி, மாவட்ட துணைத் தலைவர் அருண்ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post