தேனி மாவட்டம் வீரபாண்டி திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.


தேனி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வீரபாண்டி கௌமாரி திருவிழா நேற்று தொடங்கியது.இந்நிலையில் இவ்விழாவில் ராட்டனத்திற்கு மின் இணைப்பு கொடுக்கும் போது வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி சேர்ந்த முத்துக்குமார் வயது 32 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் உப்பார்பட்டி ஊர் பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தால் தற்போது வீரபாண்டியில் எந்த  ராட்டினங்களும் இயங்கவில்லை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


தகவலறிந்து வந்த வீரபாண்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது.

இது சம்பந்தமாக வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous Post Next Post