பலத்த காற்றினால் அறுந்து விழுந்த மின்சார கம்பி - அப்புறப்படுத்த நினைத்து கையில் எடுத்த போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி.!


மேல்மாயில் கிராமத்தில் பலத்த காற்றினால் அறுந்து விழுந்த மின்சார கம்பியை  கையில் எடுத்த  சாந்தி என்கின்ற பெண் சம்பவ இடத்திலேயே பலி

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அ டுத்த மேல்மாயில் கிராமத்தில் நேற்று இரவு பெய்த மழையின் போது பலத்த காற்றினால்  வீசியதால் மின்சார கம்பி அறுந்து சாலையில் விழுந்து இருப்பதை கண்ட கோவிந்தசாமி என்பவர் மனைவி சாந்தி  வயது 47  அறுந்து விழுந்த கம்பியில் மின்சாரம் இருப்பதை அறியாமல் கையில் எடுத்து அப்புறப்படுத்த நினைத்து கையில் எடுத்த போது மின்சாரம் பாய்ந்து  தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். 

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கே.வி.குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவல் அடிப்படையில் அங்கு வந்த கே. வி. குப்பம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 

Previous Post Next Post