கர்நாடகாவில் உள்ள பெலகாவி மசூதியில் மர்ம கும்பலால் காவிக்கொடி ஏற்றப்பட்டது. அதிகாலையில் நடந்த
இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்து மற்றும் முஸ்லீம் ஆகிய இரு சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் கொடியை கீழே இறக்கி பதட்டத்தை தனித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.