திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் நியமனம்.!

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணை யர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

2018-19ம் ஆண்டு இணை ஆணையர் தற்காலிகப் பெயர்ப்பட்டியலில் சேர்க்கப்பட்ட கார்த்திக் உதவி ஆணையருக்கு, நாகப்பட்டினம் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்ட உத்தரவினை மட்டும் மாறுதல் செய்து தற்போது காலியாக உள்ள திருச்செந்தூர், சுப் பிரமணியசுவாமி கோயில், இணை ஆணையர் பணியிடத்தில் நியமனம் செய்திட அரசு ஆணையிடுகிறது.

மேலும் இணை ஆணை யர்களுக்கான பணியிட மாறுதலுடன் ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி, கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் மாரி முத்து திருச்செந்தூர், சுப் பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்ட உத்தரவினை ரத்து செய்து ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் பணி யிடத்திலேயே தொடர்ந்து பணிபுரிய அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.

இந்து சமய அறநிலை யத்துறையில் காலியாக உள்ள நாகப்பட்டினம் இணை ஆணையர் பணியிடத்துக்கு தற்போது மயிலாடுதுறை இணை ஆணையராக பணிபுரிந்து வரும் மோகன சுந்தரத்தை முழுக்கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post