தூத்துக்குடி மாநகராட்சி சாதனை விளக்க புகைப்பட அரங்கம் - மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.!

தூத்துக்குடி தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு சாதனைகளை விளக்கும் வகையில் மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட விளக்க அரங்கத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகிழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ஜெயசீலி, ராமுத்தம்மாள், தனலட்சுமி, நாகேஸ்வரி, இசக்கிராஜா, மகேஸ்வரி, மரியகீதா, கனகராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வியாபாரிகள் சங்கதலைவர் சுப்பையா, உதவி செயற் பொறியாளர் சரவணன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் ஜோஸ்பர், இம்மானுவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post