இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்.! - குடியரசுத் தலைவர் உத்தரவு.!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையரான சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 25வது தலைமை தேர்தல் ஆணையராக வரும் 15ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்க உள்ளார்.

1984ம் ஆண்டு ஜார்க்கண்ட், பிகார் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார்,மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.

#ChiefElectionCommissioner

Ahamed

Senior Journalist

Previous Post Next Post