புத்துயிர் இரத்ததான கழகம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்


புத்துயிர் இரத்ததான கழகம் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று ஆயிரவைசிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. 

முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார்.‌மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்து முகாமை துவக்கி வைத்தார். முகாமில் கலந்துகொண்ட 66 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது .19 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். 

முகாமில் பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ், நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்கத் தலைவர் செண்பகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செயலாளர் ஆவல்நத்தம் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post