ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு.!

ஆம்பூரில் அரசு சார்பில் நாளை நடைபெற இருந்த #பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிப்பிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) முடிவை மறுபரிசீலனை செய்து மாட்டுக்கறி பிரியாணியும் இடம்பெறும் வகையில் "ஆம்பூர் பிரியாணி திருவிழா" நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட நிலையில் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post