இந்தியாவில் முதன்முறையாக கடல்பாசி பூங்கா ராமேஸ்வரத்தில் அமைய உள்ளது- மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்.!


தேர்தல் அறிக்கையில் சொன்ன கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி மற்றும் பல வாக்குறுதிகள் காற்றில் பறந்ததாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த மத்திய தகவல்  ஒலிபரப்புத்துறை,கால்நடை பராமரிப்பு துறை, பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 


திமுக அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் செய்ய தவறி இருக்கிறது. சில பொய்யான தகவல்களை சொல்லி மக்களிடம் வாக்குகளை வாங்கி ஓராண்டு ஆகியும் அதை செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தீண்டாமை தலை விரித்தாடுகிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி மயானங்கள் என்கின்ற நிலையில் இது எப்படி திராவிட மாடல் ஆட்சியாகும் என கேள்வியேழுப்பினார். 

சமத்துவம் என்ற சொல்லும் திமுகவிற்கு என்ன சமத்துவம் இருக்கிறது. தனித்தனி மாயங்களை உள்ளதை ஒழிப்பதற்கான எந்த ஒரு அறிக்கை திட்டமும் இல்லை.


தேர்தல் அறிக்கையில் சொன்ன கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி எல்லாம் காற்றில் பறந்து உள்ளது. இதெல்லாம் சாத்தியமில்லை என தெரிந்தும் அவற்றை பொய்யாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிறகு அதை அப்படியே மறப்பதே திமுக-வின் வாடிக்கையாக உள்ளது.

உள்ளாட்சி நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அங்கு வரிகளில் உயர்த்தப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 100 சதவீதம் வரி அதிகரித்துள்ளது 

ஏழை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமை என்று கூறிய அவர், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் தெளிவாக சொல்லியுள்ளார் நாட்டில் எந்த பகுதியிலும் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியும் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களை பற்றி கவலைப்படாத அரசு தான் திமுக அரசு இந்த அரசு மக்கள் மீது மட்டுமன்றி ஊழியர் மீதும் கவனம் செலுத்த முடியாத அரசாக உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே லாக்கப் டெத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

திருவண்ணாமலை, சென்னை என பல பகுதிகளில் நிறைய லாக்கப் மரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல இடங்களில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு தொடர்ந்து இந்து கலாச்சாரத்திற்கும், பண்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசு அனைத்து மதத்திற்கான நடைமுறைகளை பின்பற்றும் அரசாக இருக்க வேண்டும். ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது மிகவும் கண்டிக்க கூடியது. 

இது இந்து மக்களை மிகவும் வேதனைப் படுத்தி உள்ளது மக்கள் மிகவும் கோவத்தில் உள்ளனர், மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி  கொடுப்பார்கள்.

மீன்வளத் துறையில் ராமேஸ்வரம் பகுதியில் முதன்முறையாக மீனவ பெண்களின்  பொருளாதார முன்னேற்றத்திற்காக  இந்தியாவில் முதன்முறையாக கடல்பாசி பூங்கா இந்த பகுதியில் அமைய உள்ளது.  தமிழக அரசிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கை கிடைத்ததும் அந்த பணி தொடங்கப்படும்.

மீனவர்களுக்கு ஆழ்கடல் சென்று மீன் பிடிப்பதற்காக ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் அதிகம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச துறைமுகமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.

முன்னதாக விமான நிலையத்தில் வருகைதந்த மத்திய இணையமைச்சருக்கு தூத்துக்குடி பாஜக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


பேட்டியின்போது மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, திருநெல்வேலி மாவட்ட பார்வையாளர் பாலாஜி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மத்திய அரசு வழக்கறிஞர் சந்தனகுமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ சென்னகேசவன், 

அமைப்பு சாரா மாநில செயலாளர் தேவகுமார்,மாநில OBC அணி பொதுக்குழு உறுப்பினர் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கி முத்து, மாவட்ட பொது செயலாளர்கள் செல்வராஜ், கிஷோர் குமார், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், 

வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமார்,செயலாளர் வாரியர், இளைஞரணி மாவட்ட தலைவர் விக்னேஷ், மாவட்ட செயலாளர் வேல்ராஜ், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயகிருஷ்ணன், மற்றும் பலர் உடனிருந்தனர்

Previous Post Next Post