ஜம்மு காஷ்மீர் வங்கியின் முன்னாள் தலைவர் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் சிபிஐ சோதனை.!

ஜம்மு காஷ்மீர் வங்கி 2010-ம் ஆண்டு மும்பையில் 65,000 சதுர அடி அலுவலக இடத்தை வாங்கியது தொடர்பாக அதன்  முன்னாள் தலைவர் ஹசீப் திராபு வீடு, மும்பை, டெல்லி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள பல இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்கிழமை சோதனை நடத்தியது.

மும்பையில் உள்ள ஜம்மு காஷ்மீர் வங்கியின் ஒருங்கிணைந்த அலுவலகத்திற்காக ₹ 180 கோடிக்கு அக்ருதி கோல்ட் கட்டிடத்தை வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக நவம்பர் 1, 2021 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்று சிபிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post