அமெரிக்கா - 7.5 கோடி மதிப்புள்ள போலி ரோலக்ஸ் கடிகாரங்கள் பறிமுதல் - சுங்கத்துறையினர் நடவடிக்கை.!

அமெரிக்கா: இண்டியானா போலிஸில் உள்ள அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அதிகாரிகள் ஏப்ரல் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு பெட்டிகளில் மறைத்து கடத்தப்பட்ட போலி ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட போலியான ரோலக்ஸ் ஆடம்பர கடிகாரங்களின்  உண்மையான சந்தை மதிப்பு சுமார் 7.5 கோடி ($10.1 மில்லியன்) என்று CBP இன் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அட்டை பெட்டிகளும் ஹாங்காங்கில் இருந்து  நியூயார்க்கின் புரூக்ளினுக்கு அனுப்பப்பட்டவை என்று CBP தெரிவித்துள்ளது. மோசடி ஏற்றுமதியாளர் குறித்து உளவுத்துறைக்கு வந்த தகவலையடுத்து, இரண்டு பெட்டிகளையும் சோதனை செய்ததில் போலி கைக்கடிகாரங்கள் சிக்கியதாக CBP கூறியது. ஏப்ரல் 27ல் 300 போலி ரோலக்ஸ் கடிகாரங்களும், ஏப்ரல் 29ல் 160 போலி ரோலக்ஸ் கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டதாக CBP செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இத்தனை விலை உயர்ந்த ஆடம்பர பிராண்ட் வாட்ச் இப்படி போலியாக வரும் என யாரும்  எதிர்பார்க்கவில்லை," என்று CBP இன் சிகாகோ கள இயக்க இயக்குனர் லாஃபோண்டா சுட்டன்-பர்க் செய்தி வெளியீட்டில் தெரிவித்தார்.

"ஆன்லைன் அல்லது மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து நுகர்வோர் அதிக அளவில் பொருட்கள்  வாங்குவது பெருகி வருவதால், இது நடைபெறுவதாகவும்,போலியான பொருட்களை விற்று பணம் சம்பாதிக்க நினைக்கும் மோசடி நபர்களிடமிருந்து மக்களை பாதுகாக்க எங்கள் அதிகாரிகள் முன்னணியில் உள்ளனர்." என்றார்


Ahamed

Senior Journalist

Previous Post Next Post