கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்.! - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை காய்ச்சலால் அங்கன்வாடி மையங்கள் மூடல், - பொதுமக்கள் பீதி!

கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை வைரசால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ள இந் நோயால் இதுவரை 85க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.2017ம் ஆண்டு கேரளாவில் ஒரு முறை பரவிய இந்த தக்காளி காய்ச்சல், கோவிட் பரவி வரும் இவ்வேளையில் மீண்டும் பரவி வருவது கேரள மாநிலத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே காய்ச்சல் அதிகமாக பாதிக்கிறது. கொல்லம் மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், மக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பதிவாகும் புள்ளிவிவரங்கள். தனியார்
மருத்துவமனைகள் மற்றும் பிற
மருத்துவமனைகளைக் கணக்கில் கொண்டால், வழக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்நோய் கண்டறியப்பட்ட நெடுவத்தூர், அஞ்சல், ஆரியங்காவு பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குழந்தைகள் மத்தியில் நோய் பரவல் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வீடுகள் மற்றும் அங்கன்வாடிகளில் சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அங்கன்வாடியில் பயிலும் சில குழந்தைகளுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன.

தககாளி காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து பொது மக்களுக்கு கேரள சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது, அதில்...

அதிக காய்ச்சல், சோர்வு, அசாத்திய வலி, கைகள், கால்கள், வாய், பிட்டம் மற்றும் முழங்கால்கள் ஆகியவற்றின் நிறமாற்றம், அத்துடன் சிக்கன் குனியா போன்ற அறிகுறிகளும் அடங்கும். சிவப்பு பருக்கள் மற்றும் கட்டிகள் கை மற்றும் கால்களின் உள்ளங்கையில் உருவாகின்றன. வாயின் உள்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டு குழந்தைகள் சாப்பிடுவது மற்றும் பல சிரமங்களை ஏற்படுத்துகிறது.

தக்காளி காய்ச்சல் என்பது வைரஸால் ஏற்படும் நோய். இது ஆபத்தானது அல்ல, ஆனால் கவனமாக இருப்பது முக்கியம். நிறைய வேகவைத்த தண்ணீர் குடிக்கவும். குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். பருக்கள் கீறாமல் கவனமாக இருங்கள். நோயாளி பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் தொடக்கூடாது. நோயுற்றவர்களைக் கவனிப்பவர்கள் தூய்மையையும் தூரத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் கவனமாக இருங்கள் என எச்சரித்துள்ளது.

#tomatofever | #kerala

Ahamed

Senior Journalist

Previous Post Next Post