அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் ஜியோமி நிறுவனத்தின் ரூ. 5,551.27 கோடியை பறிமுதல் செய்வதற்கான அமலாக்கத்துறையின் முடிவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், ஜியோமி நிறுவனம் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட கணக்குகளை நிபந்தனையுடன் அன்றாட நடவடிக்கைகளுக்காக இயக்க முடியும் என்று நீதிபதி கூறினார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜியோமி நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், இந்த இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.