ராமநாதபுரம்: மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் - பைக் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி.!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டிணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கார் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post