சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நிலையம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போதும்பெண் , குழந்தைகள் நல பணியாளர் ஜூலி , தலைமை காவலர் செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டு, குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பெண் குழந்தைகள் எவ்வாறெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும், குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மொபைல் வாகனம் மூலமாக வீடியோவாக படங்கள் காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குடும்பத்தி