அம்பத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு.!


திருவள்ளூர் மாவட்டம் ஆவடிக்கு அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் அம்பத்தூர் டி1 காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தினார்.

அப்போது, அங்கிருந்த ஃபைல்களை எடுத்துவரச் சொல்லி விவரம் கேட்டார். காவல் நிலைய ஆய்வாளரும், காவலர்களும் காவல் நிலைய பதிவேடு மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார் விவரங்களை எடுத்துக் கூறினார்கள். பொறுமையுடன் அதை கவனித்து கேட்டுக்கொண்ட முதல்வர், புகார்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், விரைந்து செயலாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட சில அறிவுரைகளை அளித்துவிட்டு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டார்.


Previous Post Next Post