பவானிசாகர் தொட்டம் பாளையம் கருட பெருமாள் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தை அடுத்த பவானிசாகர் தொட்டம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கருட பெருமாள் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபி ஷேகவிழாவெகுவிமர்சையாக நடைபெற்றது. 15ம் தேதி காலை 8.40 மணிக்கு துவங்கி நடைபெற்ற விழாவில், கலசங் களுக்கு புனிதநீர்ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப் பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு கும்பாபி ஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 



Attachments area
Previous Post Next Post