தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்


தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் எஸ்.தனலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் வருகிற 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. 

அங்கிருந்து மின் வினியோகம் பெறும் மடத்தூர், சிப்காட் வளாகம், ராஜீவ் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், 3-வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, இந்திய உணவுக்கழக குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இ.பி.காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு,

 ஏழுமலையான் நகர், பால்பாண்டி நகர், ஆசீர்வாத நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், சின்னக்கண்ணு புரம்,வி.எம்.எஸ்  நகர்,சில்வர் புரம், புதூர் பாண்டியாபுரம், அகில இந்திய வானொலி நிலையம், கதிர்வேல் நகர் ஆகிய பகுதி தெருக்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous Post Next Post