தாம்பரத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து எரிவாயை சவ ஊர்வலம் போல் மேலம் அடித்து தூக்கி வந்து ஒப்பாரி வைத்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு,விலை உயர்வு காரணமாக மத்திய அரசை கண்டித்து தாம்பரம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் சமையல் எரிவாயு பாடையில் கட்டி மேளம் முழங்க சவ ஊர்வலம் போல் கொண்டுவந்து பெண்கள் ஒப்பாரி வைத்து ஆண்கள் நடனமாடியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் தேவசகாயம் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் சோலையூர் சிவா, யுவராஜ், தீன தயாளன் பத்திரிகை தொடர்பாளர் ஹரிஷ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.