சிலிண்டருக்கு இறுதி சடங்கு ஆட்டோக்கு கயிறு கட்டி இழுப்பு- நூதன முறையில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்.!


பெட்ரோல், டீசல்,கேஸ் விலை உயர்வு கண்டித்து தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பெட்ரோல், டீசல்,கேஸ் மற்றும் மாநில அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


ஆர்ப்பாட்டத்தில்  மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. மேலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, வீட்டு உபயோக சிலிண்டருக்கு இறுதி சடங்கு நடத்தியும், ஆட்டோக்கு கயிறு கட்டி இழுத்து சென்றும் நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் ஜவஹர், சேகர், ரமேஷ், மாவட்ட துணைச்செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் பாலா, மண்டல ஊடக பிரிவு நிர்வாகி மணவை யோகேஷ், மண்டல வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ரமேஷ், மண்டல இளைஞரணி செயலாளர் பிரகாஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post