பெற்றோருடன் அனுப்பினால் கொன்னுருவாங்க... போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி கெஞ்சல் வீடியோ

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் நாதாராம் இவர் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார் இவரது மகள் சோபியா குமாரி(19) அனுப்பர்பாளையம் பகுயை சேர்ந்த முரளி (28) மொபைல் கடை ஊழியரான முரளியும் மகள் சோபியா குமாரி இருவரும் காதலித்து வந்தனர் இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய சோபியா குமாரியும் முரளியும் கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து காதல் புதுமணத்தம்பதி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர் இது குறித்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சோபியா குமாரியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு காவல் நிலையம் வந்தனர்

பின்னர் பெண்ணை தங்களோடு திருப்பி அனுப்பிவைக்கக்கோரி போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர் ஆனாலும் காதலனை கரம்பிடித்த சோபியா குமாரி பெற்றோருடன் செல்ல மறுத்ததுடன் தன்னை பெற்றோருடன் அனுப்பினால் கொலை செய்து விடுவார்கள் என போலீசாரிடம் தெரிவித்து தனக்கும் தனது கணவர் முரளிக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி பிடிவாதமாக இருந்தார்

இதனால் செய்வதறியாது திக்குமுக்காடியா பெண்ணின் உறவினர்கள் நேற்று நல்லிரவு வரை காதல் ஜோடியை பிரித்து பெண்ணை தங்களோடு அனுப்பி வைக்கும்படி கேட்டு காவல் நிலையத்தை விட்டு செல்ல மறுத்து கூட்டமாக கூடியிருந்தனர் இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பாக காணப்பட்டது

இதனால் பொறுமையிழந்த காவல் துறையினர் ஒரு கட்டத்தில் கூட்டத்தை கலைக்க அதிரடிப்படை போலீசாரை வரவழைந்து பின்னர் அங்கு கூடியிருந்த பெண்ணின் உறவினர்களை கலைந்து செல்ல செய்தனர்.

இதனிடையே காதல் திருமணம் செய்து கொண்ட சோபியா குமாரி  பெற்றோரிடம் ஒப்படைத்தார் அவர்கள் கொலை செய்து விடுவார்கள் என உருக்கமாக பேசும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Previous Post Next Post