சத்தியமங்கலம் வடக்கு பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

 ஈரோடு மாவட்டம் ,சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் எழுந்தளியுள்ள, அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் குண்டம் மற்றும் கம்பம் திருவிழா 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி, 7ம் தேதி  கம்பம் நடப்பட்டு, தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கம்பத்தை சுற்றி ஆடி வந்தனர். 

இந்நிலையில் வருகிற 20ம்தேதி புதன்கிழமை காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றியும்,  முத்து பல்லக்கு சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன் பூத்தேரை பெண்கள் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.



Previous Post Next Post