எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.!


கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி மேல்நிலைப்பள்ளியில் இரண்டாவது தளம் திறப்பு விழா மற்றும் எஸ் எஸ் துரைசாமி நாடார் மாரியம்மா கல்லூரியில் 20 ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது 


நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே பழனிசெல்வம் தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு இரண்டாவது தளத்தை திறந்து வைத்தார் 


அமைச்சர் கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி பள்ளி ஆய்வக அறையைத் மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார் பள்ளி செயலாளர் கண்ணன் வரவேற்றார்


தொடர்ந்து எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கனிமொழி எம்பி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் 

நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ் செயலாளர் ஜெயபாலன் பொருளாளர் சுரேஷ்குமார் கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி துணைச் சேர்மன் ஆர்.எஸ்.ரமேஷ் 



திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் மாவட்ட துணைச் செயலாளர் பொருளாளர் வி எம் எஸ் கண்ணன் பள்ளி முதல்வர் ஜெயக்குமார் எஸ் எஸ் துரைசாமி மாரியம்மாள் கல்லூரி செயலாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post