கிணற்றில் விழுந்து பள்ளி மாணவி பரிதாப பலி

 கள்ளக்குறிச்சி க.அலம்பளத்தில் பள்ளி மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்ப்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் க.அலம்பளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள்  தீபா(வயது 12)மாணவி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். 

எதிர்பாராத விதமாக அவர் இன்று கிணற்றில் தவறி விழுந்தார். அவர் விழுந்ததை அடுத்து மீட்க இயன்ற அக்கம்பக்கத்தினரால் தீபாவை கண்டுபிடிக்க இயலவில்லை. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிணற்றில் 7 மணி நேரதேடுதலுக்கு பிறகு தீபாவை தீயணைப்பு படையினர்  சடலமாக மீட்டனர். 

 சடலத்தை பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர்.

தீபாவின் தந்தை ராஜா, தீபாவின்  தாய் விஜயா, சகோதரர் அறிவழகன்ஆகியோர் பெரும் சோகத்தில் கதறி அழுதனர்.

Previous Post Next Post