கல்லூர் கூட்டு சாலையில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா விசிக வினர் கோலாகலமாக கொண்டாடினார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் அடுத்துள்ள கல்லூர் கூட்டு சாலையில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 131ஆவது பிறந்தநாள் விழா விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆவட்டி விஜி கல்லூர் மணிவேல் துணைத் தலைவர் ஜானகிராமன் மங்களூர் ஒன்றிய பொருளாளர் தொழுதூர் இரா ரமேஷ் ஒன்றிய செயலாளர் காசி புயல் ஆயோர் தலைமை தாங்கினர்.

மருத்துவர் சரவணகுமார், வழக்கறிஞர் பாலு, காசி கணேசன் ,எஸ் நறையூர் ஐயப்பன், அடரி கிங் அருண் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ராஜ்குமார் ,முன்னாள் மாவட்டச் செயலாளர் தாயா. தமிழன்பன் ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் தீனா டைலர் சமூக ஆர்வலர் அறிவு சத்யராஜ் மற்றும் கட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post