தாளவாடி அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து : டிரைவர் உயிர் தப்பினார்

தாளவாடி அருகே குவாரி கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் சாலையோரம் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாளவாடி அடுத்த சூசையபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பயன்படாத கருங்கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி திகினாரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சூசையபுரம் வளைவில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்துக்கு வழிபட முயன்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரி முழுவதுமாக சேதமடைந்தது. விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தாளவாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Attachments area
Previous Post Next Post