ஆதி அறக்கட்டளை சார்பில் மக்கள் தொண்டன் சு.திருமாறன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 கடலூர் மாவட்டம் திட்டக்குடி  அருகே கல்லூர்  கிராமத்தில் உள்ள புத்தர் வளாகத்தில்,  புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 131 ஆம்  ஆண்டு பிறந்த நாள்  விழாவை முன்னிட்டு  ஆதி அறக்கட்டளை  நிறுவனர் மக்கள்  தொண்டர்  சு.திருமாறன்  தலைமையில்  கல்லூர்  சுற்றுப்பகுதியில்  உள்ள இருளர், குறவர், மலைவாழ்  இனத்தவர் சமூக பிள்ளைகளுக்கு அம்பேத்கர், பெரியார் நூல்கள் போன்ற புத்தகங்கள்,  இலவச நோட்டு பேனா, 5 கிலோ அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.  ஆதி அறகட்டளை பொதுச் செயலாளர் வீரசெல்வன்  முன்னிலையில் நடைபெற்ற  விழாவிற்கு அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சதீஷ்வரவேற்புரையாற்றினார். 

அப்போது  மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் கேஎன்டி சுகுணா சங்கர், செந்தில் கல்வி குழும நிறுவனரும்  விருத்தாச்சலம்  செந்தில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  இளவரசன், ஆதி பறையர் கூட்டமைப்பு  நிறுவனத் தலைவர் சாத்தை  இளங்கோவன், தமிழக பஞ்சமி நில  மீட்பு இயக்கம் மாநில  பொதுச் செயலாளர்  ராமலிங்கம், கோயம்பேடு நடைபாதை வியாபாரம் சங்கத் தலைவர்  ராஜேந்திரன், விஜய் மக்கள் இயக்கம்  மங்களூர் மேற்கு ஒன்றிய இளைஞர்  அணி தலைவர் அரவிந்த், விடுதலை சிறுத்தை கட்சியின் கம்மாபுரம் ஒன்றியம் ஒருங்கிணைப்பாளர் அசுரன் ஆகியோர் கலந்து கொண்டு 200 மாணவ மாணவிகள் மற்றும் 300 இருளர் குறவர் மலைவாழ் இன சமூக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதில் ஆனந்தன் ,இளைஞர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post