வண்டலூர் கிரஸ்ண்ட் கல்லூரியில் புதிய திட்டமான இண்டெல் உண்ணதி தகவல் மைய ஆய்வகம் - அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்

சென்னை அடுத்த வண்டலூர் கிரஸண்ட் கல்லூரியில் பி.எஸ்.அப்துல் ரகுமான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய திட்டனமான இண்டெல் உன்னதி தகவல் மைய ஆய்வகத்தை தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து.  ஆய்வகத்தில் மாணவர்களின் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு கண்டுபிடிப்புகளின் தன்மை குறித்து கேட்டறிந்தார். அமைச்சருடன் இண்டெல் இயக்குநரான முனைவர் சுமீத்வர்மா இணைந்து மாணவர்களுக்கு  உபயோகபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் பல அமைச்சகத்தில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் பேசுகையில் இவ்வகை ஆய்வகங்கள் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருப்பதோடு பல மாணவர்கள் ஸ்டார்ட் அப் தொடங்க வழிவகுக்கும் எனவும் இதன் முலம் ஸ்டார்ட் அப் சுற்று சூழலில் புரட்சி ஏற்பட்டு தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆய்வகத்தில் இண்டெல் மற்றும் சி.ஐ.ஐ.சி முயற்ச்சியை பெரிதும் பாராட்டினார். மேலும் சி.ஐ.ஐ.சி யின் தலைமை நிர்வாகி பார்வேசலம் பேசுகையில் சட்டங்களின் எண்ணிக்கையை கூட்டுவதும், தமிழ் நாட்டின் ஜிடிபி ஐ உயர்த்துவதில் சி.ஐ.ஐ.சியின்  பங்கு இருக்கும் என தெரிவித்தார். ஆய்வகத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்புகளுகு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள் ஆரிப், புகாரி ரகுமான், அப்துல்காதர், அப்துர் புகாரி ரகுமான் , முனைவர் பீர்முகமது, முனைவர் அசாத், முனைவர் ராஜா உசைன் உட்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.


மேலும் இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தமிழகத்தில் தகவல் தொடர்பு வளர்ச்சியடைய தமிழக அரசும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இனைந்து பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது எனவும் அதே போன்று கிரஸ்ண்ட் கல்வி நிறுவனமும், இண்டெல் நிறுவனமும் இணைந்து இண்டெல் உன்னதி திட்டத்தை துவக்கி உள்ளனர். இந்த திட்டத்தின் முலமாக புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களை ஊக்கபடுத்தி அவர்கள் துவக்க நிலை  நிறுவனங்களாக மாற்றி அவர்களுக்கு நிதி உதவி,தொழில்நுட்ப உதவி போன்ற முறையான வழிகாட்டுதல்களை வழங்கி வேலை வாய்ப்பு மற்றும் உற்பத்தியை பெருக்குகின்ற முயற்ச்சி எனவும் கிரஸ்ண்ட் கல்லூரியுடன் இண்டெல் நிறுவனம் இணைந்து 150 க்கும் மேற்பட்ட ஸ்டாட் அப் நிறுவனங்களோடு செயல்பட கூடிய நிலைக்கு வந்துள்ளது பாரட்டகுரியது, எனவும் தமிழக ஐ டி துறை அவர்களுக்கு ஆக்கபூர்வமான  ஓத்துழைப்பை வழங்கி வருவதாக கூறினார்.


Previous Post Next Post